தென்காசி
Tenkasi Today : தென்காசி எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா… ஆட்சியர் கமல் கிஷோர் பங்கேற்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆட்சியர் கமல் கிஷோர் பங்கேற்றார்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.அரவிந்த் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.ஏ.கே.கமல் கிஷோர் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென்காசி மாவட்ட அலுவலர் பானு பிரியா, வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா மற்றும் காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவின்போது காவலர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிசுகளை வழங்கினார்.