தென்காசியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தப்பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் பிரைசன்(33) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜவேல் குற்றவாளியான கருத்தபிள்ளையூர் பால் தெருவை சேர்ந்த ஜான் தனபால் என்பவரின் மகன் பிரைசன் (33) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.குட்டி என்ற மருதப்பன் உள்ளிட்டோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.